படம் பார்த்து கவி: பால்வெளியில்

by admin 2
100 views

பால்வெளியில் படுக்கும் போதும்
பேனே உந்தன் ஞாபகம்
மார்கழி பனியிலும் மனம்
ஏனோ உன்னை தேடிடும்

சிறகுகளை நீயும் சிறையில்
வைத்தே ஓடுவாய்
ஏனோ நான் மட்டும் சிறை பட்டு
உன் முன்னே தூங்குவேன்

உந்தன் வரவை எண்ணி பார்க்கையில்
எந்தன் மனது மழலையாய் மாறுது
பனை ஓலை காத்தாடி யாய்
பழைய நினைவு சுற்றுது

இலவசமாக நீயும் எங்கள்
இல்லங்களுக்கு வந்ததாலே
உந்தன் செல்வாக்கு இன்று
செல்லா காசாய் போனது

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!