படம் பார்த்து கவி: வண்டல்

by admin 1
104 views

வண்டல்,கரிசல்
செம்மண்,துருக்கல்
சரளை,பாலை
என வகை வகையாய்
மண்.

பொன்னாசை,
பெண்ணாசை
மண்ணாசை
என விரிந்து
செல்லும்
மனித ஆசைகள்.

எது தின்றாலும்
எது செரித்தாலும்
இறந்த பின்னால்
நம் வயிற்றை
நிரப்பப்போவது
ஒரு பிடி மண்தான்.

ரிஷாதா ரஷீத்

You may also like

Leave a Comment

error: Content is protected !!