படம் பார்த்து கவி: வற்றி ப் போன கிணறு

by admin 1
186 views

1.வற்றிப் போன கிணற்றின் கடைசி தண்ணி கண்ணீராய் தெரிகிறது…
இன்னும் நிரம்பிட இடம் இருந்தும் நிரம்பவில்லை வாளி
அதுவும் ஏழை வீட்டுக் கேணியாக இருக்கக் கூடும்…
2.அழைத்திருப்பான் வள்ளுவன் வாசுகியை…
அவளும் தண்ணியை சேமித்த பின் சென்றிருப்பாள் தண்ணீர் பஞ்சம்…

  1. ஆழ்துளை கிணறுகள் உறிஞ்சிய பிறகு எஞ்சிய கண்ணீராய் தண்ணீரைத் தருகிறது இந்தக் கிணறு…
  2. தூக்குப் போட்டு கருணைக் கொலை செய்தாலும் கண்ணீரை தண்ணீராக தருகிறது வாளி…

அன்புடன்
கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!