படம் பார்த்து கவி: விண்மீன்

by admin 2
104 views

நிலாப் பெண்ணோடு
இரவின் நிழலில்
உலா வரும்
நட்சத்திர நாயகனே

இமையின்றி ஒளிர்கிறாய்
இதழின்றி நகைக்கிறாய்
ஓசையின்றி அழைக்கிறாய்

உன் அழகை
ரசித்து பிரமித்த
என்னை அழைத்து
என்ன வேண்டுமென
நீ கேட்டால்……..

உன்னைத் தவிர
என்ன கேட்பேன் நான்🤔
பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!