தமிழ் தமிழ் தமிழென்றே தொடர்ந்துரைத்திடில்
அமிழ்தமிழ்தென்றே தீஞ்சுவையாய் தீண்டிடுமே செவியினுள்ளே
நாவினிக்கும் தேனினும் மிகுசுவையாய் சுகிக்கையிலே
செவியினுக்கும் சுகமேகிடும் சுகந்தமிகு சுவையாகுமே
புவியுள பலமொழியினும் புலமைமிகு மொழியன்றோ
கவிபல புனையவும் கவினுறுமொழியன்றோ
காவியங்கள் கடவுளர்க்கும் கணக்கின்றி கண்டதுடன்
கடவளடியாராம் கடைநிலையானவர்க்கும் இலக்கியங்கள் இருக்கின்றனவே
பாசையது ஓசையென பேசியபொழுதினிலே
பனையோலை பானையோடு கல்மண்ணெணவே
காண்பதிலெலாம் கணக்கின்றியே
கடந்துவந்தே
கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தின் முன்தோன்றிய
முதிர்வின் முதுபெரும் முதிர்மொழியன்றோ
எதிர்த்திடவே எதுவுமிலா எழிலுறுமொழியன்றோ
வாய்மொழியில் உரைத்துவிடில் தீர்ந்திடுமோ
தாய்(தமிழ்) மொழியின் தாகமது வாய் ஓயாதுரைக்கனுமே
வானளாவிய வளமையும் செழுமையுமுடை செம்மொழியன்றோ
தமிழவள் மடிதவழ்ந்தாடிடவே தவமெதும் செய்யலியே
தவமிலா வரமெனவே தினம்தினம்
பருகிப்பருகிடவே பரவசம் மிகவாகிடுதே
தாரணியின் மொழிகளுக்கும் ஊரணியாய் ஊற்றெடுக்கும்
காரணியாய் கரையடங்கா களஞ்சியமாம் கவின்மொழியானதினால்
உண்பது அமிழ்தெனினும் தனியராய் உண்ணாதே
உயரிய தமிழமிழ்தை தரணிபோற்றிடும் வகையெனவாக்கிடுவோம்
ஜே ஜெயபிரபா