தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்…
திங்கட்கிழமை:
வெற்றிலை – 4,
மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி,
கொதிக்க வைத்துக் குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.
செவ்வாய்க்கிழமை:
கடுக்காய் பொடி
பனங்கற்கண்டு
சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.
புதன்கிழமை:
தூதுவளை,
கற்பூரவல்லி,
துளசி
இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.
வியாழக்கிழமை:
சுக்கு,
மிளகு,
சீரகம்,
ஓமம்
சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
வெள்ளிக்கிழமை:
வெந்தயம்,
தனியா (மல்லிவிதை)
சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.
சனிக்கிழமை:
முருங்கைக்கீரை,
வெங்காயம்,
தக்காளி,
பூண்டு,
மஞ்சள்தூள் மற்றும்
உப்பு
சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை:
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.
இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.-