அகம் புறம்: நோய் எதிர்ப்பு சக்தியின் மந்திரம்

by Admin 4
42 views

✴️தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்…


💠திங்கட்கிழமை:

🔸வெற்றிலை – 4,

🔸 மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி,

கொதிக்க வைத்துக் குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.


💠செவ்வாய்க்கிழமை:

🔹கடுக்காய் பொடி

🔹பனங்கற்கண்டு

சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.


💠புதன்கிழமை:


🔻தூதுவளை,

🔻கற்பூரவல்லி,

🔻துளசி

இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.


💠வியாழக்கிழமை:


▫️சுக்கு,

▫️மிளகு,

▫️சீரகம்,

▫️ஓமம்

சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.


💠வெள்ளிக்கிழமை:

🔹வெந்தயம்,

🔹தனியா (மல்லிவிதை)

சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.


💠சனிக்கிழமை:

🔸முருங்கைக்கீரை,

🔸வெங்காயம்,

🔸தக்காளி,

🔸பூண்டு,

🔸மஞ்சள்தூள் மற்றும்

🔸உப்பு

சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.


💠ஞாயிற்றுக்கிழமை:


🔻சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

🔻இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது.

🔻உடல் ஆரோக்கியமாக இருக்கும்.-

You may also like

Leave a Comment

error: Content is protected !!