✴️தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்…
💠திங்கட்கிழமை:
🔸வெற்றிலை – 4,
🔸 மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி,
கொதிக்க வைத்துக் குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.
💠செவ்வாய்க்கிழமை:
🔹கடுக்காய் பொடி
🔹பனங்கற்கண்டு
சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.
💠புதன்கிழமை:
🔻தூதுவளை,
🔻கற்பூரவல்லி,
🔻துளசி
இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.
💠வியாழக்கிழமை:
▫️சுக்கு,
▫️மிளகு,
▫️சீரகம்,
▫️ஓமம்
சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
💠வெள்ளிக்கிழமை:
🔹வெந்தயம்,
🔹தனியா (மல்லிவிதை)
சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.
💠சனிக்கிழமை:
🔸முருங்கைக்கீரை,
🔸வெங்காயம்,
🔸தக்காளி,
🔸பூண்டு,
🔸மஞ்சள்தூள் மற்றும்
🔸உப்பு
சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.
💠ஞாயிற்றுக்கிழமை:
🔻சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.
🔻இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது.
🔻உடல் ஆரோக்கியமாக இருக்கும்.-