✨தக்காளி குருமா
♦️தேவையான பொருட்கள்:
🔸தக்காளி – 2 அல்லது 3 பெரியது
🔸வெங்காயம் – 1
🔸புதினா – 5 இலை
🔸கொத்தமல்லி நறுக்கியது – 1/4 கப்
🔸பச்சை மிளகாய் – 2
🔸சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
🔸கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
🔸மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
🔸முந்திரி – 8
🔸பட்டை – ஒரு சிறு துண்டு
🔸லவங்கம் – 2
🔸ஏலக்காய் – 1
🔸எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
🔸உப்பு – தேவையான அளவு
♦️செய்முறை:
🔻பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
🔻இத்துடன் 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கவும்.
🔻கடைசியாக கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
🔻மீண்டும் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து மீதம் உள்ள பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
🔻வெங்காயம் வதங்கியதும் பாதி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
🔻குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
🔻அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
🔻நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை அரைத்து ஊற்றவும்.
🔻நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறவும்
