அறுசுவை அட்டில் : முந்திரி கொத்து

by Admin 4
23 views

✴️முந்திரி கொத்து

தேவையான பொருட்கள்:

🔹முழு பச்சை பாசி பயறு

🔹வெல்லம்

🔹அரிசி மாவு

🔹துருவிய தேங்காய்

🔹ஏலக்காய் பொடி

🔹மஞ்சள் தூள்

🔹உப்பு

🔹எண்ணெய்

செய்முறை:

💠வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தை கொதிக்க வைத்து வெல்ல பாகு தயாரித்து கொள்ளவும்.

💠ஓர் சூடான கடாயில் பச்சை பாசி பயறை நன்கு வறுத்து சிறிது நேரம் கழித்து அதனை பொடியாக அரைக்கவும்.

💠பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

💠அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

💠இப்போது தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் கலக்கி வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அவை அனைத்தும் வெல்ல பாகோடு சேறுமாறு நன்கு கலக்கவும்.

💠அவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும் போதே அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

💠பின்பு வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவின் அடுத்த நிலை பதத்திற்கு கலககவும்.

💠தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்.

💠கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும்.

💠நன்கு பொரிந்த பின்பு இனிப்பு கொத்துகளை பரிமாறவும்.

💠இதனை சிறிது நாட்கள் வைத்தும் சாப்பிடலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!