அறுசுவை அட்டில் : வெண் குருமா

by Admin 4
15 views

வெள்ளை குருமா

💠தேவையான பொருட்கள்:

🔹பீன்ஸ் – 5

🔹கேரட் – 1 பெரிது

🔹உருளை – 1 பெரி்து

🔹பச்சை பட்டாணி – ஒரு கை அளவு

🔹வெங்காயம் – 1 பெரிது

🔹பச்சை மிளகாய் – 6

🔹இஞ்சி – 1 துண்டு

🔹பூண்டு – 4 பல்

🔹மல்லி – 1 மேசைக்கரண்டி

🔹புதினா – 1 மேசைக்கரண்டி

🔹பட்டை – 1 துண்டு

🔹லவங்கம் – 3

🔹ஏலக்காய் – 2

🔹பிரியாணி இலை – 1

🔹தேங்காய் துருவல் – 1/4 கப்

🔹முந்திரி – 10

🔹பால் – 1/2 கப்

🔹கசகசா – 1 மேசைக்கரண்டி

🔹எண்ணெய் – 2 தேக்கரண்டி

🔹உப்பு – தேவையான அளவு

💠செய்முறை:

🔸கசகசா மற்றும் முந்திரியை வெது வெதுப்பான 1/4 கப் பாலில் ஊற விடவும்.

🔸ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

🔸இஞ்சி பூண்டு தோல் நீக்கி பச்சை மிளகாய் 3 சேர்த்து அரைக்கவும்.

🔸வெங்காயம் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்.

🔸பச்சை மிளகாய் மீதம் உள்ளதையும் நறுக்கி வைக்கவும்.

🔸புதினா கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.

🔸உருளை, பீன்ஸ், கேரட் நறுக்கி வைக்கவும்.

🔸பட்டாணியை ஊற விட்டு வேக வைத்து எடுக்கவும்.

🔸பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

🔸இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வத்க்கவும்.

🔸வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

🔸பின் நறுக்கிய காய் கலவை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.

🔸தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.

🔸காய் வெந்ததும் அரைத்த முந்திரி தேங்காய் கசகசா விழுது சேர்த்து தேவைக்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.

🔸மசாலா வாசம் போக கொதித்ததும் மீதம் உள்ள பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு புதினா கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!