✨வெள்ளை குருமா
💠தேவையான பொருட்கள்:
🔹பீன்ஸ் – 5
🔹கேரட் – 1 பெரிது
🔹உருளை – 1 பெரி்து
🔹பச்சை பட்டாணி – ஒரு கை அளவு
🔹வெங்காயம் – 1 பெரிது
🔹பச்சை மிளகாய் – 6
🔹இஞ்சி – 1 துண்டு
🔹பூண்டு – 4 பல்
🔹மல்லி – 1 மேசைக்கரண்டி
🔹புதினா – 1 மேசைக்கரண்டி
🔹பட்டை – 1 துண்டு
🔹லவங்கம் – 3
🔹ஏலக்காய் – 2
🔹பிரியாணி இலை – 1
🔹தேங்காய் துருவல் – 1/4 கப்
🔹முந்திரி – 10
🔹பால் – 1/2 கப்
🔹கசகசா – 1 மேசைக்கரண்டி
🔹எண்ணெய் – 2 தேக்கரண்டி
🔹உப்பு – தேவையான அளவு
💠செய்முறை:
🔸கசகசா மற்றும் முந்திரியை வெது வெதுப்பான 1/4 கப் பாலில் ஊற விடவும்.
🔸ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
🔸இஞ்சி பூண்டு தோல் நீக்கி பச்சை மிளகாய் 3 சேர்த்து அரைக்கவும்.
🔸வெங்காயம் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்.
🔸பச்சை மிளகாய் மீதம் உள்ளதையும் நறுக்கி வைக்கவும்.
🔸புதினா கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
🔸உருளை, பீன்ஸ், கேரட் நறுக்கி வைக்கவும்.
🔸பட்டாணியை ஊற விட்டு வேக வைத்து எடுக்கவும்.
🔸பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
🔸இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வத்க்கவும்.
🔸வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
🔸பின் நறுக்கிய காய் கலவை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
🔸தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.
🔸காய் வெந்ததும் அரைத்த முந்திரி தேங்காய் கசகசா விழுது சேர்த்து தேவைக்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.
🔸மசாலா வாசம் போக கொதித்ததும் மீதம் உள்ள பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு புதினா கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.