எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் பெண்களுக்கு மிகுந்த மரியாதை தருபவன். ஆனால் என்னையே அவர் அல்ல அவள் என்னை ” கள்ளி ” என்று சொல்லி விட வைத்தார்.
அவள் பெயர் ப்ரியா. எங்கள் வீட்டுக அடுத்த தெருவில் அவர வீடு இருந்தது. எனக்கு அவரை ரொம்ப பிடித்து இருந்தது. எனக்கு அவரை கல்யாணம் செய்து கொள்ள ஆசை. தினமும் அவளை காலை மாலை பார்ப்பேன்
எனக்கு வேலை இல்லாததால் கல்யாண பேச்சு பேச முடிய வில்லை. அப்போது தான் அவருக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. அவளுடன் பழக வேண்டும் என அந்த வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு ஆரம்பித்தேன். நான் பேசினேன். அவளும் பேசினார். நான் அடிக்கடி வங்கி செல்ல ஆரம்பித்தேன்.
எனக்கு நேரில் சொல்ல பயமாக இருந்தது. ஒரு கடிதம் எழுதினேன். சுமார் 40 பக்க கடிதம் எழுதினேன். பல்வேறு பரிசு பொருட்களையும் அனுப்பி வைத்தேன். ஆனால் பதில் வரவில்லை.
நான் கடிதம் எழுதுவதும்… பரிசு பொருள் அனுப்புவதும் வாடிக்கை ஆனது. நான் கடைசியாக ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில் மாத இறுதிக்குள் பதில் சொல்ல சொல்லி இருந்தேன்.
சென்னையில் சுனாமி வந்த நாள்… ஆம் என் வாழ்விலும் சுனாமி தான். ஒரு கால் வந்தது. யார் எனக் கேட்டேன்.
” நீங்கள் கடிதம் எழுதிய பெண்ணின் மாமனார் பேசுகிறேன்…! “
” ப்ரியாவிற்கு கல்யாணம் ஆகி விட்டதா…? ” கேட்டேன்.
” ஆமாம்.. “
” சாரி சார்…! ” என்று சொல்லி விட்டு கதறி கதறி அழுதேன்.
என்னால் துக்கம் தாங்க முடியாமல் இரண்டு குவாட்டர் விஸ்கி வாங்கி வந்து குடித்தேன்.
மனச்சோகம் போகவில்லை. என் காதல் முடிந்தது.
ஆம்.
எல்லாவற்றையும்
எடுத்து விட்டேன்
வாந்தி…? ? ?
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.