தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
மு. வரதராசன் உரை :
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.
பால் : காமத்துப்பால்
இயல் : களவியல்
அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்