நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
மு. வரதராசன் உரை :
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
பால் : காமத்துப்பால்
இயல் : களவியல்
அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்