அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
மு. வரதராசன் உரை :
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.
பால் : காமத்துப்பால்
இயல் : களவியல்
அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்