படம் பார்த்து கவி: அகமும் அப்பளமே

by admin 1
51 views

அவனன்பை ஆண்டவனன்பெனவே அறி(ந்தே)கிறேன்

அத்தனையதிக ஆழ்ந்தன்பென்னில் அவனுக்கு

அதீத ஆத்மார்த்த அன்பாகி

அடிமனதுள் அப்பளமாய் ஆனந்தபூரிப்பெனக்கு

ஆகாதவளென அவன் அகன்றிடினும்

அடித்துடைத்த அப்பளமாய் அகமாகினும்

அவனன்பு அப்படியேதானுளது அகநிறைவாய்!!

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!