படம் பார்த்து கவி: அண்டமே பிண்டம்

by admin 1
119 views

அண்டம் எல்லாம் நிறைந்திருக்கும் ஈசனே
உன்னை என் பிண்டத்தில் என்று காண்பேனோ

பால்வெளி அண்டத்தில்
பாதை மாறாமல் சுற்றும்
கோள்கள் போல்
உன் பாதம் சுற்றி வருகிறேன்
மோக்ஷம் எனும் தீக்ஷை தா

அண்டமே பிண்டமாம்
பிண்டமே அண்டமாம்
உணர்தல் எப்போது அதை
புரிதல் எப்போது

பித்தனாகி உனை தேடுகிறேன்
சித்தனாகி உன் திருவடி பற்றுகிறேன்
முக்தி தா முக்கண்ணனே

என் உச்சந்தலையில் இருக்கும்
ஆயிரம் இதழ் கொண்ட
சகஸ்ரார தாமரையில்
பாதம் பதித்து நீ ஆடும்
ஆனந்த நடனம் காண்கையில்
இப் பிரபஞ்சமே நானானேனே

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!