படம் பார்த்து கவி: அன்னை

by admin 1
42 views

அன்னை

           பத்து  திங்கள் வலியோடு
வேதனையோடு என்னை
சுமந்தாய் எனக்கு பிடிக்காது
என்று உனக்கு பிடித்த
உணவுகளை புறம் தள்ளினாய்
வாந்தி எடுத்து கலைத்து
போனாய் சில நேரங்களில் சிறு
குழந்தையாய் மாறி என் முகம்
தெரியும் முன்பே என்னுடன் பேசி
கொண்டு இருந்தாய்
எனக்காக ஒவ்வொரு பொருளும்
பார்த்து பார்த்து வாங்கி
வைத்தாய் ஆனால் உனக்கு
என்ன அவசரம் நான் வந்து
உன்னை பார்ப்பதறக்கு முன்பே
நீ என்னை ஈன்று விட்டு
நிரந்தரமாக துயில் கொண்டாய்
உனக்கு என்னை பார்க்க ஆசை
இல்லையா என்னுடன் நேரில்
பேசி விளையாட விருப்பம்
இல்லையா என்னை சுற்றி
எத்தனையோ உறவுகள் இருந்தும்
என் மனம் உன்னை மட்டுமே
தேடும் அது உனக்கு தெரியாதா
நான் இவ்வளவு
கஷ்டப்படுவதை நீ நிழலாய்
இருந்து பார்த்து
வேதனைபடுவாயே நீ இல்லாமல் 
எனக்கும் வேதனை நான்
இருந்தும் உனக்கும் வேதனை
இந்த வேதனைக்கு நீ
என்னையும் உன்னுடன்
அழைத்து சென்று
இருக்கலாமே அன்னையே……… 💕 ரியா ராம் 💕

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!