- அறிவுரை *
ஆட்சி என்று வந்து விட்டால்
மந்திரியாரின் அறிவுறையில்லா
ஆளுமை ஏது….!!
பாதிரியாரின் பெயர் கொண்ட
உங்களை வணங்கி பாட வருகிறேன் ….!!
ஆங்கிலேயரின் சாதுர்யத்தில்
சக்தியின்றி புத்தி கூர்மை
தீட்ட வந்த சதுரங்கதிளும் தனி இடம் பெற்ற ஆளுமையின்
அறிவுரையாளரே…!!
நீல வண்ண நிறத்தில்
கண்களை குளிர்விக்கும்
பாதிரியாரே….!!
பக்குவமாய் அரசை ஆள
எடுத்துரைக்கும் அரசனின்
மந்திரியாரே…!!
சதுரத்தினுள் சிறையெடுக்க
வைக்கும் சிந்தனையாளரே ….!!
வீரர்களின் விவேகத்தை விவரிக்கும்
முற்ப்போக்காளரே…!!
தவறிலைக்காமல் தலைசிறந்த
ஆளுமையை தாங்கி பிடிக்க
தலையாய கடமையில்
சிறந்து விளங்கும் உங்களை
போற்றி பாடுவதில்
மகிழ்கிறேன் ….!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)