படம் பார்த்து கவி: அழகான

by admin 1
41 views

அழகான குழப்பம்

காரிருள் மேகம்
மறைய கதிர்க்
கிரணம் வீச
உதயமான கதிரவன்

பகலவனின் வருகையை
பறைசாற்றும் செந்நிற
வானின் ஒளியைப்
பிரதிபலிக்கும் கடல்

கடலழகா வானழகா
என எண்ணத்தின்
கற்பனைக்கு உரு
கொடுத்த வார்த்தைகள்
வண்ணக் கோல்
கொண்ட ஓவியமாய்
புத்தகக் குறிப்பேட்டில் ????

குழப்பத்தில் குளம்பியோடு☕️
குழம்பிய கவிஞன்🫠

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!