படம் பார்த்து கவி: அழகாய்

by admin 1
36 views

அழகாய் மலர்ந்திடும்
அதிகாலை உதயமது

ஆரஞ்சு வண்ணம் பூசி
ஆராதிக்கும் வானம்

இயற்கையின் வர்ணஜாலம்
இனிமையைக் கூட்ட

ஈதன்றோ வாழ்க்கையென
ஈன்றவள் ஆசி தர

உயிரனைய மனையாட்டி
உவகையுடன் தேநீர் தர

ஊராரின் பாராட்டில்
ஊஞ்சலாட மனம் விழைய

எழுத்தாணியெனப் பென்சிலதை
எடுத்தேன் விருப்புடனே

ஏடெடுத்து வரைந்தேன்
ஏகனாம் சூரியனை

ஒரு போதும் மறவான்
ஒரு நாளும் விடான்

ஓட்டமெடுக்க மாட்டான்
ஓடி ஓளிய மாட்டான்

ஔவியம் பேசான்
அஃதே கதிரவன்

இந்துமதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!