படம் பார்த்து கவி: ஆழ்கடலின்

by admin 1
45 views

ஆழ்கடலின் தோன்றும்
மென் அலைகள் காண்கையில்
மௌனமாய் தன்
இணை கரம் கோர்த்து
நடந்திட ஆசை தோன்றும்..

ஆழிப் பேரலையாக மாறி
அனைத்தையும் வாரி
பேரிரைச்சல் இட்டு
தன்னுள் சுருட்டி
அழிந்த பின்னர்
அமைதியாக இருக்கும்
ஆர்கலி காண்கையில்
அச்சமே மிச்சம்..

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!