படம் பார்த்து கவி: இசையாலே இரசவாதம்

by admin
134 views

ஏழு ஸ்வரங்களில்
தொடங்கும் இசைதனில்
இன்பம் பெருகிடும்
கேட்கும் இதயத்தில்

நொடிக்கு நொடி
மாறும் மனதை
நிலைப் பொழுதில்
நிலைக்க செய்யும்
இசையை கேட்கையிலே
இன்பம் கோடி வரும்

இரசவாதம் செய்யும் கலை
இசையாலே செய்யும் வினை
இசையாலே தீபம் ஏற்றிய
தான்சேன் வழிவந்த கலை

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!