படம் பார்த்து கவி: இயற்கைச் செல்வம்

by admin 1
121 views

வான் மண் நீர் நெருப்பு
காற்று என
மாசற்ற ஐம்பூதங்களில்
பாசமுள்ள வானமே
நேசமுடன் உன்னை
வேஷமின்றி ரசிப்பேன் .
சூரிய கோள் மற்றும்
தேறிய நிலவும் உன்
வீதியில் நடமாடி
போதிமரத்தடி புத்தராய்
வேதியல் மாற்றம் இல்லா
சேதி சொல்வதை
பாதியின்றி முழுமையாக
நம்புகிறேன். இதில்
தெம்பும் வருவதால்
வம்பு வேண்டாம் என
சூரியனை வணங்கி
வீரிய பலம் பெறுகிறேன்

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!