படம் பார்த்து கவி:   இறுக்கிப் பிடித்துக் கொ(ல்)ள் என்னவனே

by admin 1
101 views

நீல நிற குழாய்
போல் கம்பி வடத்தின் ஒரு முனையாய் நீ இருக்க…

உனை ஏந்தும் செருகு முனையாய் நானிருக்க…

எத்தனை தூரம் சுழன்று
நீ
சென்றாலும்
வந்து சேர்வது என்னவோ
என்னிடம் தான்…

மின்சாரமாய் நீ பாயும் பொழுதுகளில்
இறுக்கிப் பிடித்துக் கொ(ல்)ள்ளடா கள்வனே
என்னையும் என் காதலையும்…..

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!