படம் பார்த்து கவி: ஈரைந்து

by admin 1
41 views

ஈரைந்து திங்கள்
கரு சுமந்து

தாங்க முடியா வலி தாங்கி
பிறப்பு தந்து

உதிரத்தைப் பாலாக்கி
உயிரூட்டி இன்று

எங்கே சென்றாய்
எனதருமை தாயே

உன் படமதை வரைந்து
அதுதான் நீயென

அழுது அரற்றும்
இச்சிறு உள்ளம்

தேற்றி வாழ்விக்க
வாராயோ அம்மா

இந்துமதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!