படம் பார்த்து கவி: உத்தம தாயே

by admin
46 views

உத்தம தாயே
    உயிருக்குள் அடைகாத்து,
         ஈரைந்து மாதங்கள்,
         உன்னுள் சுமந்து,
    நீயின்றி  நானில்லை;
      மண்னில் நான் முளைக்க
       உன் வேறின்றி
           வேறேதும் இல்லை; ….
    இயற்கை சீற்றத்திலும்
        வெள்ளி கோர்வையின்
          பிடிகளுக்கு மத்தியிலும்;,
    நீல நிற ஆடை உடுத்தி
      நீரோடையில் நீந்த தயாராகும்;
       நிறைமாத நிலவே
             உன் உயிருக்காக
         உயிரை தந்து
         வேறூன்றியிருக்கும் ;
    பூமி தாயின் மீது தன் உயிரை
       சுமக்கும் ஒவ்வொரு ஜீவனும்
          உன்னை போன்று
              தலைசிறந்த ❤️…..உத்தம தாய்தான் …..❤️
   
    ✍🏼 ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!