படம் பார்த்து கவி: உன் மீதான

by admin 1
34 views

உன் மீதான அமைதியை கடத்துகிறேன்

நடுச்சமுத்திரத்தில் நுரைத்து பொங்க தெரியாத

பேரமைதியை கைகொண்டு கன்னம் ஒட்டுவது போல

ஓர் இரவு மெல்ல அசைகிறது

கரை சேரும் எண்ணமற்ற போதும்

தூரத்தில் கையசைக்கும் சிறு அலைக்காக மணலடைகிறேன்

கரை நெருங்க நெருங்க ஆர்ப்பரித்து

உந்தித் தள்ளும் அலைகளின் வேகத்தை

எதிர்கொள்ள முடியாத சிறு படகென

உயர்ந்து விழும் என் உணர்வுகளுக்கு

நுரை பூசி தரை தள்ளுகிறது

அங்கே இன்னொரு படகு பயணத்தை தொடர்கிறது….

🌺நிழலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!