படம் பார்த்து கவி: ஊடுறுவும் ஒளி

by admin 1
30 views

ஊடுறுவும் ஒளி இடைவெளி

ஒத்தையடி பாதையிலே
அந்தி சாயும் வேலையிலே
யாருமில்லை பாதையில
மனசு உன்னை தேடுதடி
பட்ட மரம் பூக்குதடி

வானுயர்ந்த மரங்கள் எல்லாம்
வழி நெடுக நிக்குதடி
சூரிய கதிரை எல்லாம்
வடிகட்டி அனுப்புதடி
அலை அலையாய்
வெள்ள ஒளி பரவுதடி
மனசு உன்னை தேடுதடி
வானவில்லு பூக்குதடி!

ஒரு வழி பாதையாய்
வாழ்க்கை பயணம் இதில்
இரு புறமும் நீதானே
நிழல் கொடுக்கும் உருவம்!
முப் பொழுதும் உன் நினைவில்
பயணம் அது தொடரும்!
நான்கு திசையிலும்
ஊடுறுவும் ஒளி
உடை இல்லா இடை வழி!
ஐந்து பொறியிலும் இன்பம்
உன்னாலே உண்டாகும் தினம்
ஆறுதலை தரும்
உன் கரம் கோர்க்கும் வரம்!
ஏழு ஏழு பிறப்புக்கும்
இது போதும் எனக்கு
எப் பிறவி எடுத்தாலும்
இதுவே என் இலக்கு சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!