படம் பார்த்து கவி: கடமை

by admin 1
32 views

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கட்டிய வீடாய் நினைத்து
கட்டாந் தரையிலோர்
கற்பனைவீடு
காலணி கூட வெளியில்
விட்டு
நான்கு சுவர்களுக்குள்
நலமுடன்
நன்றாய்த் தூங்கி மகிழ்கின்றாய்
வாழ்வில் வெற்றி உன்வசம்
வந்து சேரும் தானாக!
விளையும் பயிர் முளையிலே
வீணாகாது உன் வாழ்க்கை
வாழ்க வளத்துடன்
கண்மணியே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!