கண்ணீர்
துன்பத்தின் அடையாளம் கண்ணீர் இன்பத்தின் அடையாளம் சிரிப்பு
சிரித்து நடித்து வாழ்வோர் போல
நடித்து அழுது வாழ்வோர் உண்டோ
அழுவது போல் நடிப்பது கடினமே
இயற்கையாக சுரப்பது கண்ணீரே
முதலை வடிப்பதில்லையே கண்ணீர்
தன் உடலில் உள்ள அதிக உப்பை
கண்கள் வழியே வெளியேற்ற
பிறர் பரிவை தவறாக நாட
செயற்கை கண்ணீர் வடிப்பவரே
முதலைக் கண்ணீர் வடிக்கிறாரே.
க.ரவீந்திரன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)