படம் பார்த்து கவி: கண்ணீர்

by admin 1
44 views

கண்ணீர்

துன்பத்தின் அடையாளம் கண்ணீர் இன்பத்தின் அடையாளம் சிரிப்பு
சிரித்து நடித்து வாழ்வோர் போல
நடித்து அழுது வாழ்வோர் உண்டோ
அழுவது போல் நடிப்பது கடினமே
இயற்கையாக சுரப்பது கண்ணீரே
முதலை வடிப்பதில்லையே கண்ணீர்
தன் உடலில் உள்ள அதிக உப்பை
கண்கள் வழியே வெளியேற்ற
பிறர் பரிவை தவறாக நாட
செயற்கை கண்ணீர் வடிப்பவரே
முதலைக் கண்ணீர் வடிக்கிறாரே.

க.ரவீந்திரன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!