படம் பார்த்து கவி: கருவறைக்குள்

by admin
50 views

கருவறைக்குள் கண்டதெல்லாம்
கருமையன்று வேறொன்றில்லை
கண் திறந்து கொண்டபோதும்
புது நிறமென்று ஏதொன்றுமில்லை

பார்வையற்றவன் பட்டத்துடன்
பார் போற்ற வலம் வந்தவன்
வெள்ளைப் பிரம்போடு
கறுப்புப் பாதையில் பயணித்தவன்

ஓவியங்களை ஓரக்கண்ணாலேனும்
ஒருகாலும் கண்டதில்லை
நிறங்களை மனக்கண்ணாலும்
நொடிப்பொழுதும் இரசித்ததில்லை

ஒளியிழந்த என் விழியூடாக
மனதுள் எழும் வண்ணங்களை
காண்பவர்கள் இங்கு உண்டா?
அந்த நிறத்திற்கு பெயர் உண்டா?

*சித்திரவேல் அழகேஸ்வரன்*
இலங்கை

You may also like

Leave a Comment

error: Content is protected !!