படம் பார்த்து கவி: கறை

by admin 2
49 views

ஆழி அலையாய்
அலைச்சல் பணியேற்று
அகப்பை சுமந்த
அகவுகளைக் காத்து
அசராமல் கழிவு கழுவி
அடுக்களையில் அவிந்து
அர்த்த ராத்தியில் அயர்ந்து
ஆதவனுக்கு முன் எழுந்து
ஆசைகள் ஆயிரம் துறந்து
அங்கும் இங்குமாய்
அவமானங்கள் சுமந்து
அடிமரமாய் சுமையேற்று
கிளைகளைக் கரைசேர்த்து
ஓடிய பெரும் ஓட்டத்தில்
அயர்ந்த உடல் தளர்ந்திட
ஆதாயமற்ற அநாவசியமென
தொத்தி நின்ற அத்தனையும்
தொரத்திடவே விளைகிறதே!
பிசுக்கேறிய ஏனம்தனைத்
தேய்த்துத் தேய்ந்ததும்
தூக்கி எறியப்படும்
நாரும் நானும் ஒன்றோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!