படம் பார்த்து கவி: கல் மனசு கடவுள்

by admin 1
116 views

நீ தான் வேண்டுமென
அந்த கல் மனசு கடவுளிடம்
வரங்கள் எல்லாம் கேட்டதுண்டு
அம்மிக்கல்லாய்
இருப்பவளிடம்
ஒரு போதும் காதலை எதிர்ப்பார்க்காதே
என்று சொன்ன கடவுளின் குரல் ஏனோ
என் செவிட்டு காதுகளுக்கு விழவே இல்லை
காலங்கள் கடந்த பின்
காயங்கள் வந்த பின்
நிம்மதி கிடைத்தால் போதுமென
பெருமூச்சு விட வைத்து விடுகிறது
இந்த அல்ப வாழ்க்கை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!