படம் பார்த்து கவி: காதலென்னும் கொடிய நோய்

by admin 1
33 views

நீ அழுதால்
என்னையுமறியாமல் கண்ணீர் வருகிறது
நீ சிந்தும் கண்ணீர்
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
எந்த கிரகங்களின்
பூமி தொடாத படி ஓடி வந்து துடைக்க வேண்டும்
உனக்கு ஆறுதலாய் என் மடி தர வேண்டும்
உனக்கு எப்போதும் நானிருக்கிறேன் என சப்தமிட்டு சொல்ல வேண்டும்
உன் உதடுகளில் புன்னகை மட்டுமே நிறைய வேண்டும்
எனக்கு என்ன ஆயிற்று?
என்னை விட
உன்னையே உயிராய் நினைத்து நேசிக்கிறேன்.
ஓ……
இதுதான் காதலென்னும் கொடிய நோயா?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!