படம் பார்த்து கவி: தீர்க்கம்

by admin 3
54 views

புள்ளினமாய் மெல்லின நடையில்
மென்பஞ்சு மேகப்பொதியாய்
கருப்புச்சட்டை நீதிபதியாய்
இருகை நீட்டி இடையை ஆட்டி
அசைந்து வரும் அழகுத் தேராய்
ஆடி ஆடி வரும் அதிசயம்
இறக்கை இருந்தும்
பறக்கை கைசேராததை
குறையெனப் புலம்பாது
வண்ணத்துப்பூச்சியையோ
வான் கழுகையோ
நிமிர்ந்து பார்க்காது
கவலையேயின்றி
கடலுக்குள் களித்துக்
குளித்து குதியாட்டமிட்டு
தனக்கென அமைந்ததை
தாராளமாய் கொண்டாடித்
தீர்க்கும் தீர்க்கம்
எதிரோனை வியந்து
சுயத்தைச் சூறையாடி
சுமைகளைத் தேடி நாடி
நாட்களை வீணடிக்கும்
நமக்கும் தேவையன்றோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!