படம் பார்த்து கவி: நல்லதை

by admin 1
35 views

நல்லதை மட்டுமே பார்த்தேன்
பார்க்காதே என்றது
நல்லதை மட்டுமே
கேட்டேன்
கேட்காதே என்றது
நல்லதை மட்டுமே செய்தேன்
செய்யாதே என்றது
எங்களை போல் பச்சோந்தியாய் வாழ் என்றது
முடியாது என்றேன்
தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்டேன்
மிரட்டி பார்த்தது
மற்றவர்களை போல் நீயும் இரு என்றது
இறுதியில் பைத்தியக்கார பட்டமும் தந்தது
இந்த பொல்லாத உலகத்தில்
வாய் மூடி,கண் பொத்தி,செவிடனாய் வாழ்வதே உத்தமம்
மற்றவர்களை போல் நீயும் இல்லாமல் போனால்
உறக்கத்தை கூட
நிம்மதியில்லாமல்,வர விடாமல் செய்து விடுவார்கள்.
சமூகத்தில் சமநிலையோடு வாழ அவர்களை போல்
போலியாய் பிரதியெடுத்து வாழ்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!