படம் பார்த்து கவி: நீலக் கடலே

by admin 1
31 views

நீலக் கடலே
செங்கதிரின் பிரதிபலிப்பே
கண் கூசாத செவ்வானமே
பார்க்க பார்க்க திகட்டாத
இளங்காலைப் பொழுதே

அழகான இயற்கை காட்சியை
காகிதத்தில் பிரதிபலிக்க
வண்ணப் பென்சில்களை
எடுத்து வைத்தேன் மேஜையிலே
காலை உறக்கம் கலைய
சூடாக தேநீரும் தயார்
ஓவியம் எழுத
என்னவன் எங்கே?

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!