படம் பார்த்து கவி: நெருங்கி விலகி

by admin 1
64 views

நெருங்கி விலகி
விலகி நெருங்கி
விளையாடும்
வின்வெளி நட்சத்திரங்களை
விண்னுக்கு வழங்கிய
இறைவனே
ஏன் எனக்கு தரமறுத்தாய் என
கண்ணீர் மல்கி
கடல்தாய் கேட்க
இறைவனால்
படைக்கப்பட்ட
நட்சத்திர மீனே
உடல்பாகங்கள்
இழக்க இழக்க
மீளபொருத்தி
உன்னை
அழகாய் வைத்துக்கொள்ளும்
உயிரே

விண்மீன்
எரிந்தால் எரிகற்கள்
நீ இறந்தால் இளம்
பூக்கள்
எதிலும் இனையா
இரு துருவம்
படைத்தது மட்டும்
ஒரே உருவம்
நட்சத்திர மீன்
என்றால்
வானில் ஒளிரவேண்டும்
மிளிரவேண்டும்
நீயோ ரத்த சிவப்பாய்
சுடுமண்ணில்தானே
உழல்கின்றாய்
குழந்தை களின்
உள்ளம் கவர்ந்த கள்வனே
இறைவனின்
அற்புத படைப்பே…
M. W Kandeepan

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!