படம் பார்த்து கவி: பிரிவும் வந்தது

by admin 1
95 views

கண்கள் கலந்தது
கைகள் இணைந்தது
உன் உயிர் என்னிடமும்
என்னுயிர் உன்னிடமும்
இடமாறியும் கொண்டது
வாழ்க்கை ஏனோ
சக்கரையாய் இனிக்க தான் துவங்கியது
ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்பார்கள்
காலம் செல்ல,செல்ல
மனசு ஒத்துப் போகாத
உறவுகளுக்குள்
ஈகோவால்
பிரிவும் வந்தது
முறிவும் வந்தது
காமம் கடந்த இல்லறம் மட்டுமே
கடைசி வரை வரும் என்பதை
மண் நம்மை திண்ணும் வரை
மனிதன் உணர்வதே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!