படம் பார்த்து கவி: புதிய பாதை

by admin 1
40 views
  • புதிய பாதை *
    துணிந்து நடக்க
    தொடங்கி விட்டாள்;
    இல்லை !!இல்லை !,
    துணிந்து விட்டாள்;
    வாழ்க்கை பயணம்
    வழிகாட்டியாகும் !!!…
    கதிரவன் ஒளியால்
    புத்துணர்ச்சியுடன்,,,!!
    தன்னந்தனி வனத்தில்
    இருவழி பாதையில் என்
    பாதம் பதித்து பயணம்
    தொடங்கினேன் ….,
    காலை பொழுதில்
    தனிமை கைகோர்த்து
    இனிமை பயணம்
    செல்ல ஏன் தாமதம் ….,
    தனிமையோடு பழகி
    இனிமை காண இயற்கை ., அன்னையின் மடிவேண்டும் …
    பாதைகள் பல கடந்து
    சென்றாலும் இலக்கு
    எதுவென்பதை
    நிர்ணயித்து விட்டாள்.,;
    பாதைகளும் தூரமில்லை;
    பயணங்களும் பாரமில்லை; ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!