படம் பார்த்து கவி: பூவும் பொட்டும்

by admin 2
55 views

திருமண நாளில்
மாங்கல்யம் கட்டி
கழுத்தை சுற்றி
கையை வளைத்து
அவள் நெற்றியில்
குங்குமப் பொட்டிட
அவள் மறைந்ததும்
மெலிதாக விபூதி பூசி
கீழே ஸ்டிக்கர் பொட்டிட்ட
அவளது ஒளிப் படத்தில்
நெற்றியின் கீழே
குங்குமப் பொட்டிட
உயிரோடு உள்ள போது
அவள் பூவை பொட்டை
ரசிக்க மறந்தேன்

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!