படம் பார்த்து கவி: மகளே தாயாக

by admin 1
29 views

மகளே தாயாக

எண்ணம் இல்லா
வாழ்வில்
வண்ணங் கொண்ட
ஓவியமாய்
பிள்ளை இல்லா
துயரறுக்க
ரோஜா நிறத்தோடு
கள்ளமில்லா சிரிப்போடு
பிறந்த மகளே…..

காலங்கள் கடந்து
வளர்ந்து
பொறுப்புகள் பல
சுமந்தாலும்
இன்றும் அதே புன்னகை

ஆரோக்கிய தேகமும்
சீரிய சிந்தனையோடு
என்றும் நீடுழி வாழ்க

என் மகளாக
அல்ல அல்ல
என் தாயாக

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!