படம் பார்த்து கவி: வண்ணங்களின் எண்ணங்கள்

by admin
39 views

மஞ்சளில் மங்களத்தையும்!
பச்சையில் பசுமையையும்! ஆரஞ்சில் ஆற்றல், தன்னம்பிக்கையும்!
நீலத்தில் குளிர்ச்சியையும்!
சிவப்பில் துணிச்சலையும்!
ஊதாவில்
அமைதியையும்!
இளம் சிவப்பில்
காதலையும்!
எதிர்ப்பார்த்த
என் வாழ்வு
அனைத்தையும்
கலந்ததும்
கிடைக்கும் வெண்மையாக போனதேனோ!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!