வண்ணந்தீட்டுதலில்
புது விதம்
வானம் காணா நிறங்களில்
மேனி.
பூக்களை
பெருமூச்சு விட வைக்கும்
தோகை.
ஏதோ குறைவதாய்
புலம்பினான் ஓவியன்…
மயிலின்
தனிமைத்துயரை
அதன் கண்களில்
படித்தறியாமல்.
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)