படம் பார்த்து கவி: வண்ண எண்ணங்கள்

by admin 1
42 views

வண்ண எண்ணங்கள்

எண்ணங்களை வண்ணங்களால்
எத்தனை கற்பனை
எத்தனை உருவங்கள்
அத்தனையும் மனம்
இலயிக்க வைத்தாய்!

அன்னப் பறவை
பாலைப் பருகுதோ
ஆங்கே கானகம்
பற்றி எரியுதோ
மொட்டு விரித்து
மலர் மணம்பரப்புதோ
செழித்துக் கொழுத்தோர்
கரத்தினில் ஒழுகுதோ
ஏழைகள் கரம்
பற்றியுண்ண முயலுதோ
பற்றிப்படர கொடிகள்
தொற்றி வளருதோ
கரு மேகங்கள்
கொட்ட முனையுதோ
பந்தை எட்டியுதைக்க
பாலர் முயல்வரோ

அவரவர் மனத்தில்
ஆயிரம் கற்பனைகள்
எத்தனை எத்தனை
இன்பம் வைத்தாய் இறைவா!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!