உள்ளங்களை
கொள்ளையடித்து
கொள்ளும்
வண்ணங்களே!
வானவில்லே
வியந்துபார்க்கும் !
……வர்ணஜாலமே ….
பூமியை பிளந்து வரும்
நீரோடையாய்;
வண்ணங்களோடு
இணை பிணைந்து வரும்
…..வர்ணஜாலமே ….
சிற்பங்களுக்கு
உணர்வுபூர்வமாய்
உயிரூட்டும் ;
வண்ண வண்ண
…..வர்ணஜாலமே …..
செங்கதிரோன் கையில்
வண்ண ஆடைகலாய்
போர்த்தியிருக்கும்
……வர்ணஜாலமே …..
என் கண்களை
உன் வசமாக்கி
இமைகளுக்கு
விடுமுறையலித்த
அழகு கொஞ்சும்
……வர்ணஜாலமே …..
நம் எண்ணங்களும்
வண்ணங்களை போல்
இருக்குமாயின் ;
வர்ணஜாலத்தில்
வண்ணங்கள்
நிறைந்த நந்தவணமாகும்
….*,,வாழ்க்கை ,*….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: வர்ணஜாலம்
previous post