வானம் வெட்கத்தில் சிவந்து
செவ்வானமாய் காட்சியளிக்க;
மேகங்களோ கண்னிமைக்க
மறந்து களையாது நிற்கின்றன;
பூமி தாய்க்கும் வயதாகி விட்டதோ
பசுமை இழந்து வறண்ட சருமத்தில்
வாடி கிடக்கிறாள்;
பூமி தாயின் உயிரை நீராக உறிஞ்சி
விட்டு ஒரு சொட்டு நீரை உணக்களிக்க மணமில்லா
மனிதர்களையும் தூக்கி
சுமக்கும் தாயே,
உனை கண்டு மனம் மறத்து போன
மேக கூட்டங்கள் கூட
அழ மறந்து போய்விட்டன
வானம் பார்த்த பூமி என்பதனை….!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
