படம் பார்த்து கவி: வெண் தாரகையே

by admin 1
42 views
  • வெண் தாரகையே *
    இயற்கை படைப்பில் மனிதன்
    கண்டுபிடிப்பில்;
    சிக்கி முக்கி கற்களில்
    தோன்றிய பொறியிலிருந்து
    உருவான
    வெண் தாரகையே;
    அக்னி தேவதையின் அணைப்பிற்கு பின் வரும்
    வெண் தாரகையே;
    சுபமான இடத்தில் தூபமாகும்
    வெண் தாரகையே;
    வண்ணங்களில் தனித்துவமான
    வெண் தாரகையே;
    கருமை நிற திறைக்கு முன்
    எழுச்சி பெறும்
    வெண் தாரகையே;
    கணகளை கவராது
    கலங்க வைக்கும்
    வெண் தாரகையே;
    விரல்களால் பிடிக்க
    முடியதா உனை,,,
    வார்த்தைகளில் வரைந்து
    மகிழ்கிறேன்
    வெண் தாரகையே,,,!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!