படம் பார்த்து கவி:

by admin
54 views

என் மன வானின்
வானவில்லை
சூறையாடி வந்த
மழை முகில் குவியலோ !
இல்லை…..

என் கனவுலகின்
வர்ணஜாலங்களின்
ஊற்றா !
இல்லை

என் வாழ்வை
வசந்தமாக்க வந்த
வர்ண தேவதை
புயலோ !
இல்லை….

என் கவலைகளை மறந்து
உன் வர்ணங்களை வருடி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து விளையாடி
மகிழவோ !
இல்லை …..

அந்த பிரம்மனே மதிமயங்கிட
உன் வர்ணங்களை தொட்டு பேரழகி ஓவியத்தை தீட்டிடவோ !
இல்லை….

நீ எனக்கு புரியாத
புதிரோ….. !!!

— இரா. மகேந்திரன்—

You may also like

Leave a Comment

error: Content is protected !!