எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன்
மெய் எழுத்து வார்த்தை: சிவம் / ம்
அந்த கிராமத்து கோவிலில் உள்ள சிவன் கோவில் மிகுந்த பிரதானமான
கோவில் , கிராமத்து வாசிகள் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்தாலும் சிவராத்திரிக்கு தவறாமல் அந்த கோவிலுக்கு வந்து விடுவர்.
அந்த ஊரில் அரசு பணி புரிந்து ஒய்வு பெற்று சௌகரியமாக குடும்பத்துடன் குடித்தனம் நடத்தி வரும் ராமன் பலே கில்லாடி .
சிவராத்திரிக்கு முதல் நாள் பதிவு போல அண்டை வீட்டார் , மற்றும் எதிர் விட்டார் இருவரும் போன் செய்து அபிஷேகம் செய்ய பத்து லிட்டர் பால் வாங்கி வைக்க சொல்லி விட்டனர் .
அடுத்த தெருவில் இருந்த இன்னொரு ஸ்நேகிதனும் அவன் சார்பாக ஒரு பத்து லிட்டர் பால் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுக்க சொல்லி ஏற்கனவே பணம் அனுப்பி விட்டான் .
சிவராத்திரி அன்று மொத்தத்தில் பத்து லிட்டர் பால் மட்டும் வாங்கி
அர்ச்சகரிடம் கொடுத்து வைத்து அவனது பாலை அபிஷேகம் செய்யும் முன் சைகை காட்டுமாறு ஏற்கனவே கூறி விட்டான் .
அன்று மட்டும் சுமார் நூறு லிட்டர் பால் அபிஷேகத்திற்கு வந்து விட்டதாக அர்ச்சகர் கோவிலுக்குள் செல்லும் முன் கூறி சென்று விட்டார் .
சிவராத்திரி வந்து விட்டது , ஒரே கூட்டம் , அபிஷேகம் ஆரம்பிக்கும் வேளையில் அர்ச்சகர் அங்கிருந்து ராமனை பார்த்து கைகாட்டி
அவர் பணியை தொடர ஆரம்பித்தார் .
அருகில் மும்முரமாக வணங்கி கொண்டு இருந்த அண்டை வீட்டு பெரியவரிடம் ” இதுதான் உங்க பால் , நன்றாக கும்பிட்டுக்கோங்க ” என்று கூறி அடுத்த வரிசையில் கடைசியாக இருந்த இன்னொரு உறவு காரரை மெல்ல பக்கத்தில் போய்” இதுதான் உங்க பால் ” என்று கூறி அவரையும் மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்து விட்டான்
எல்லாம் முடிந்து . வீட்டுக்கு வந்த போது அவன் மனைவி ” என்னங்க , பால் அபிஷேகம் செய்ய சொன்னேனே , செய்தார்களா ? என அப்பாவியாக வினவ ” ஆமாண்டி , பாலுக்கு ரொம்ப டிமாண்ட் , எப்படியோ கஷ்டப்பட்டு அடுத்த ஊரில் போய் வாங்கி வந்து சிறப்பாக அபிஷேகம் செய்தாச்சு ” என்று கூறி பிரசாதங்களை வீட்டில் கொடுத்தான் .
மறு நாள் பால் வாங்கி கொடுத்த வகைக்கு என இரண்டு வீடு காரர்களும் தனித்தனியாக ரூபாயை கொடுத்து செல்லும் போது
ராமனின் மனைவி ” என்னங்க, பாலுக்கு ரொம்ப டிமாண்ட் என்று சொன்னிங்களே , எப்படி சமாளி சீங்க : என்று கேட்டாள்.
ராமனோ அதற்கு ஆமாண்டி , பால் கிடைப்பது பெரிய கஷ்டம் , மொத்தத்தில் இருபது லிட்டர் தான் கிடைச்சுது . ஒரே தண்ணி, பால் காரர் நன்றாக சம்பாதித்து விட்டார் ” என்று மனைவியிடம் கூற அவளும் அதற்கு
” நீங்க மட்டும் என்னவாம் , இருபது லிட்டர் மட்டும் பாலை வாங்கி
எனக்கு தெரிஞ்சு ஐஞ்சு பேரிடம் ருபாய் வாங்கி உங்க சம்பாத்தியத்தை பார்த்து விட்டீர்களா அது போலத்தான்
பால் காரரும் :
அவரவர் சக்திக்கேற்ப தான் சம்பாதிக்க முடியும் , ஆனா மேல இருக்கிற சிவன் சும்மா இருக்கிறதா நினைக்காதீங்க ,,, எல்லாத்தையும் அவன் பாத்து எப்போ கணக்கு தீர்க்கணும்னு தெரியும் , இனிமேல் இந்த தப்பை பண்ணா திங்க : ” என சொல்லியதும் ராமன் சற்று கோபப்பட்டு ” போடி , நீயெல்லாம் எனக்கு புத்தி சொல்ல வந்திட்டியா ” என கோபப்பட்டு வெளியே சென்று டீ கடைக்கு சென்று சூடாக டீ சாப்பிட்டு வீட்டுக்கு வந்து அமைதியாக தூங்கி விட்டான் ,
மறு நாள் எழுந்திருக்கும் போது ஒரே வயிற்று வலி , மருத்துவரிடம் செல்ல காத்திருக்கும் போது வரிசையில் அந்த பால் காரரும் இருந்தார் ,
” என்னப்பா , உனக்கும் வயித்து வலியா? என்று கேட்க ” ஆமாம் அண்ணே, விடவே மாட்டேங்குது .
எப்பவும் குடிகிற டீ கடையில்தான் டீ குடிப்பேன் , இனிமே இந்த டீ சனியனை தொடவே கூடாது ” என்று வயிற்றை பிடித்த படி முனகியவாறு கூறினான் .
சிவன் கோயில் மணி காலை பூஜைக்கு அடித்த ஒலி சம்பட்டியாக தெரிந்தது .
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.